Thursday, April 24, 2014

ஏப்ரல் 27, 2014

உயிர்ப்பு காலம் 2-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
நம்பிக்கை கொண்டோரே,
   பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருவழிபாட்டுக்கு நம் ஆண்டவர் பெயரால் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இறை இரக்கத்தின் ஞாயிறை சிறப் பிக்கும் இன்றைய நாளில், இறைமகன் இயேசு தம் திருத்தூதர்கள் வழியாக, பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை திருச்சபைக்கு வழங்கிய நிகழ்வு இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகிறது. நாம் கடவுள் மீது எந்த அளவுக்கு சந்தேகம் கொண்டிருந்தாலும், நமது ஐயங்களைப் போக்க கடவுள் இரக்கத்துடன் காத்திருக்கிறார் என்பதை உணர அழைக்கப் படுகிறோம். உயிர்த்த இயேசுவில் முழுமையான நம்பிக்கை வைக்கவும், மரணத்தை வென்ற அவருக்கு சான்று பகரவும் உறுதி ஏற்போம். திருத்தந்தையர்கள் இருபத்துமூன் றாம் யோவானும், இரண்டாம் யோவான் பவுலும் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் இந் நாளில், நாமும் புனிதத்தில் வளர வரம் வேண்டி, இந்த திருப்பலியில் விசுவாசத்துடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
நம்பிக்கை கொண்டோரே,
   இன்றைய முதல் வாசகம், தொடக்க கிறிஸ்தவர்களின் எடுத்துக்காட்டான வாழ்க்கை முறையை விவரிக்கிறது. அவர்கள் திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள் என்று வாசிக்க கேட் கிறோம். ஆண்டவரில் நம்பிக்கை கொண்டோர் அனைவரும், பிறரது தேவைகளை அறிந்து ஒருவருக்கொருவர் உதவி செய்பவர்களாய் வாழ்ந்தனர். எல்லா உடைமைகளை யும் பொதுவாய் வைத்திருந்ததுடன், கூடி செபிப்பதிலும் ஒரே மனதுடன் செயல்பட்டதைக் காண்கிறோம். நமது அன்பியம் மற்றும் பங்கு அளவில் ஒருவருக்கொருவர் உதவி வாழும் மனநிலை உருவாக வரம் வேண்டி, இந்த வாசகத்தை கவனமுடன் செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
நம்பிக்கை கொண்டோரே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு, கிறிஸ்து இயேசுவின் உயிர்த் தெழுதல் வழியாக நாம் அடைந்துள்ள புதுப்பிறப்பைப் பற்றி எடுத்துரைக்கிறார். ஆண்டவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்பை பெற்றுள்ள நாம், விண்ணுலகில் அழி யாத உரிமைப்பேறு பெறுவோம் என்ற உறுதியை பேதுரு அளிக்கிறார். நாம் துன்பங்க ளால் புடமிடப்படும் வேளையில், கடவுள் மீதான நம்பிக்கையில் இருந்து தளர்ந்துவிடா மல் இருக்க நினைவூட்டுகிறார். உறுதியான நம்பிக்கையுடன் ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகரும் வரம் வேண்டி இந்த வாசகத்தை கவனமுடன் செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நம்பிக்கையின் நாயகரே இறைவா,
   திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவ ரும் தங்கள் நம்பிக்கையில் நிலைத்திருந்து, உமது சாட்சிகளாக திகழ வரமருள வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பின் அரசரே இறைவா,
  
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், உம் திருமகனின் உயிர்ப்பில் முழுமையான நம்பிக்கை கொண்டு, இறையன்பிலும் பிறரன்பிலும் வளர துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்மையின் நிறைவே இறைவா,
  ஆன்மீக இருளில் வாழும் எம் நாட்டு மக்கள் அனைவரும், உம் திருமகனின் உயிர்ப்பில் உள்ள உண்மையை அறியச் செய்து, அதன் வழியாக உமது மீட்பை வழங்க
வேண்டு மென்று  உம்மை மன்றாடுகிறோம்.
4. புதுவாழ்வின் ஊற்றே இறைவா,
  உலகெங்கும் உள்நாட்டில் அகதிகளாக துன்புறுவோரும், அச்சுறுத்தல்களால் இடம் பெயர்ந்தோரும் உமது உதவியால் உரிமை வாழ்வு பெற உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. நன்மைகளின் உறைவிடமே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், தொடக்க கிறிஸ்தவர் களைப் போன்று ஒற்றுமையுடன் உமக்கு சான்று பகர்பவர்களாக வாழ
அருள்பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.