Thursday, March 7, 2013

மார்ச் 10, 2013

தவக்காலம் 4-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   தம் மக்கள் மீது அளவற்ற அன்பு கொண்டுள்ள ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப் பலிக்கு உங்களை வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் நான்காம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். நமது மனமாற்றத்தின் வழியாக கடவுளுக்கு மகிழ்ச்சி அளிக்க இன் றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் வழிதவறிய பிள்ளைகளாய் அலைந்து திரிந்தாலும், கடவுளின் அன்பை உணர்ந்து அவரிடம் திரும்பி வரும் நாளை அவர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். கடவுளின் அன்பையும் பராமரிப்பையும் நாம் முழுமையாக புரிந்துகொள்ளும்போது, அவரது எல்லையற்ற இரக்கத்தில் மகிழ்ச்சி காண முடியும் என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் அன்பில் முழு மையாக நம்மை கரைத்துக்கொண்டு, அவரது விருந்துக்கு நம்மை தகுதியாக்கி கொள் ளும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய முதல் வாசகம், கானான் நாட்டில் இஸ்ரயேலர் கொண்டாடிய முதல் பாஸ்கா விழாவைப் பற்றி எடுத்துரைக்கிறது. எகிப்தியருக்கு எதிராக இஸ்ரயேல் மக்க ளுக்கு வாக்களிக்கப்பட்ட ஆண்டவரின் மீட்புச் செயல் நிறைவு பெறுவதை இங்கு காண் கிறோம். ஆண்டவரின் பராமரிப்பில் நாற்பது ஆண்டுகளாக மன்னாவை உண்டு வாழ்ந்த வர்கள், தங்கள் சொந்த உழைப்பின் பலனை மீண்டும் ருசி பார்க்கிறார்கள். எகிப்தியரின் கேலிப் பேச்சுக்கு ஆளான அடிமை வாழ்வுக்கு பதிலாக, ஆண்டவரின் செயலால் இஸ்ர யேலர் உரிமை வாழ்வை அனுபவித்த நிகழ்வு எடுத்துரைக்கப்படுகிறது. நாமும் கடவு ளின் வாக்குறுதிகளில் நம்பிக்கை கொண்டு, மகிழ்ச்சி நிறைந்த புது வாழ்வை பெற்றுக் கொள்ளும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்து வழியாக நாம் புதிய படைப்பாக மாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை எடுத்துரைக்கிறார். தந்தையாம் கடவுள் நமது குற்றங்களைப் பொருட்படுத்தாமல், ஆண்டவரான இயேசுவின் வழியாக நம்மை அவரோடு ஒப்புரவாக்கினார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். நம்மை புனிதர்களாக மாற்றவே, இறைமகன் இயேசு பாவநிலை ஏற்றார் என்பதை உணர்ந்து வாழ நாம் அழைக் கப்படுகிறோம். நமது மனமாற்றத்தின் வழியாக நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாற வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மனமாற்றம் தருபவராம் இறைவா,
   உமது திருச்சபையை மனமாற்றத்தின் பாதையில் வழிநடத்தும் ஆற்றல்மிகு திருத் தந்தையை எங்களுக்கு தந்து, அவருக்கு கீழ்ப்படிந்து வாழும் உள்ளத்தை இறைமக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மைப் பணிந்து மன்றாடுகிறோம்.
2. அனைவரையும் ஈர்ப்பவராம் இறைவா,
   உமது மாட்சிக்கும் திருவுளத்துக்கும் எதிராக பாவத்தில் வாழ்ந்து வரும் மக்கள் அனை வரும் மனந்திரும்பி, உம் அருள் இரக்கத்தை நாடி தேடும் வரமருள வேண்டுமென்று தாழ்மையுடன் உம்மை மன்றாடுகிறோம்.
3. அன்பின் அரசராம் இறைவா,
   உலகெங்கும் காணப்படும் அநீதிகள், வன்முறைகள், பயங்கரவாதச் செயல்கள் ஆகிய தீமைகளை உமது அன்புத் தீயால் சுட்டெரிக்க வேண்டுமென்று உரிமையுடன் உம்மை மன்றாடுகிறோம்.
4. உண்மையின் உருவாம் இறைவா,
       நீர் ஏற்படுத்திய திருச்சபைக்கும், உம்மை பற்றிய உண்மைக்கும் எதிராக உலகில் உள்ள தவறான சமயங்கள், நம்பிக்கைகள், கொள்கைகளை வேரறுக்க வேண்டுமென்று பணிந்த அன்புடன் உம்மை மன்றாடுகிறோம்.
5. இரக்கம்நிறை தந்தையாம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உமது நன்மைத் தனத்துக்கு எதிராக செய்த அனைத்து பாவங்களையும் விடுத்து, உம்மிடம் மனந்திரும்பி வர அருள்புரிய வேண்டுமென்று மன உருக்கத்துடன் உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, March 2, 2013

மார்ச் 3, 2013

தவக்காலம் 3-ம் ஞாயிறு

முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 3:1-8,13-15
   அந்நாள்களில் மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலைநிலத்தின் மேற் றிசையாக ஓட்டிக்கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார். அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்துகொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை. ''ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்'' என்று மோசே கூறிக்கொண்டார். அவ் வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். ''மோசே, மோசே'' என்று சொல்லி கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் ''இதோ நான்'' என்றார். அவர், ''இங்கே அணுகி வராதே; உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றி விடு; ஏனெனில் நீ நின்றுகொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்'' என்றார். மேலும் அவர், ''உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக் கோபின் கடவுள் நானே'' என்றுரைத்தார். மோசே கடவுளை உற்றுநோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார். அப்போது ஆண்டவர் கூறியது: ''எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட் டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கி வந்துள்ளேன்.'' மோசே கடவுளிடம், ''இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, 'அவர் பெயர் என்ன?' என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?'' என்று கேட்டார். கடவுள் மோசேயை நோக்கி, 'இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே' என்றார். மேலும் அவர், ''நீ இஸ்ரயேல் மக்களிடம், 'இருக்கின்றவர் நானே' என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்'' என்றார். கடவுள் மீண் டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ''நீ இஸ்ரயேல் மக்களிடம், 'உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக் கோபின் கடவுள் - என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்' என்று சொல். இதுவே என் றென்றும் என் பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!''
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 10:1-6,10-12
   சகோதர சகோதரிகளே, நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நம் முன்னோர் அனைவரும் மேகத்தின்கீழ் வழிநடந்தனர். அவர்கள் அனைவரும் கட லைக் கடந்து சென்றனர். அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் கடலாலும் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர்கள் அனைவரும் ஒரே ஆன் மீக உணவை உண்டனர். அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மீகப் பானத்தைப் பருகினர். தங்களைப் பின்தொடர்ந்து வந்த ஆன்மீகப் பாறையிலிருந்து அவர்கள் பருகினார்கள். கிறிஸ்துவே அப்பாறை. அப்படியிருந்தும், அவர்களில் பெரும்பான்மையோர் கடவுளுக்கு உகந்தவராய் இருக்கவில்லை. பாலை நிலத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் தீயனவற்றில் ஆசை கொண்டு இருந்தது போல நாமும் இராதவாறு இவை நமக்கு ஒரு முன்னடையாளமாக நிகழ்ந்தன. அவர்களுள் சிலர் முணு முணுத்தனர். இதனால் அவர்கள் அழிவு விளைவிக்கும் தூதரால் அழிக்கப்பட்டனர். அவர்களைப்போல் நாமும் முணுமுணுக்கக் கூடாது. அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர் களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக் காலத்தில் வாழும் நமக்கு இவை அறி வுரையாக எழுதப்பட்டுள்ளன. எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப் பவர் விழுந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளட்டும்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 13:1-9
  அக்காலத்தில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழி யாக, "இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரை யும்விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கி றேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழி வீர்கள்'' என்றார். மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: "ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், 'பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காண வில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண் டும்?' என்றார். தொழிலாளர் மறுமொழியாக, 'ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்' என்று அவரிடம் கூறினார்.''

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3