Wednesday, September 5, 2012

செப்டம்பர் 9, 2012

பொதுக்காலம் 23-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
நன்மைக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு இயேசுவில் செயல்பட்ட கடவுளின் வல்லமையை உணர நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைவாக்கினர்கள் முன்னறிவித்த இறைவாக்குகள் இயேசுவில் நிறைவேறியதை இன்றைய வாசகங்கள் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன. அற்புதங்கள் செய்கின்றவராகிய நம் ஆண்டவரை நம்பிக்கையோடு தேடிச் சென்று நன்மைகளைப் பெற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகி றோம். நமது உடல், உள்ளக் குறைகளை நீக்க அவரால் முடியும் என்ற நம்பிக்கையை மட்டுமே கடவுள் எதிர்பார்க்கிறார். நம் ஆண்டவரைப் போன்று பிறருக்கு நன்மை செய்ப வர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
நன்மைக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, கடவுள் இந்த உலகிற்கு வரு வார் என்ற நம்பிக்கையின் செய்தியை வழங்குகிறார். கடவுள் அநீதிக்கு பழிவாங்குபவ ராக வந்து மக்களை விடுவிப்பார் என்ற இனிமையான செய்தி தரப்படுகிறது. பார்வை யற்றோர் பார்ப்பர், காது கேளாதோர் கேட்பர், கால் ஊனமுற்றோர் துள்ளிக்குதிப்பர், வாய் பேசாதோர் மகிழ்ந்து பாடுவர் என்ற வாக்குறுதி அளிக்கப்படுகிறது. கடவுளில் முழுமை யாக நம்பிக்கை வைத்து, அவரது நலந்தரும் வாக்குறுதிகளுக்கு தகுதியுள்ளவர்களாக வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
நன்மைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு, அனைவரையும் சமமாக கருதும் மனநிலையோடு செயல்படுமாறு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்ட நம் ஒவ் வொருவருக்கும் அழைப்பு விடுக்கிறார். வேறுபாடின்றி அனைவருக்கும் கடவுள் நன்மை களைப் பொழிவது போன்று, நாமும் வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் நல்லவற்றை செய்ய அழைக்கப்படுகின்றோம். கடவுளின் முன்னிலையில் அனைவரும் சமம் என்பதை உணர்ந்தவர்களாய், ஏற்றத்தாழ்வு பார்க்காமல் வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நன்மைகளின் ஊற்றாம் இறைவா, 
   உம் திருமகனின் வழியில் அனைவருக்கும் நன்மை செய்பவர்களாகவும், நற்செய்தி அறிவிப்பவர்களாகவும் வாழும் வரத்தை, திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத் தார் அனைவருக்கும் அளித்து, உமது திருச்சபையை புனிதத்தில் வழிநடத்த வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நம்பிக்கையின் ஊற்றாம் இறைவா,
  உலகெங்கும் நீர் செய்து வரும் அற்புதங்களின் மேன்மையால் மக்கள் உமது வல்ல மையை உணரவும், நீர் உண்மை கடவுள் என்பதை உலகம் முழுவதும் அறிந்துகொள் ளவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அன்பின் ஊற்றாம் இறைவா,
 
எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் தன்னலத்தினைக் களைந்து, சமூக நலத்திலும், எளியவர்களின் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டவர்களாய் வாழ்ந்து, இறையாட் சிக்குரிய சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தைக் கட்டியெழுப்ப உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நலந்தரும் ஊற்றாம் இறைவா,
   உம்மை நம்பிக்கையோடு தேடி வரும் மக்களின் உடல் நோய்களையும், மன நோய்க ளையும் முழுமையாக குணப்படுத்தி, மற்றவர்களின் முன்னிலையில் உமது மாட்சிமிகு செயல்களின் சாட்சிகளாக
அவர்களை மாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. அருளின் ஊற்றாம் இறைவா,
   உம் திருமகன் இயேசுவின் அன்பை வெளிப்படுத்தும் ஏற்றத்தாழ்வற்ற கிறிஸ்தவ சமூகத்தை உருவாக்குபவர்களாய் வாழும் அருளை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரி கள், பங்கு மக்கள் அனைவர் மேலும் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.