Thursday, May 29, 2014

ஜூன் 1, 2014

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
"இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்."
விண்ணகத்துக்குரியவர்களே,
   ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரை யும் வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகிறோம். மரணத்தை வெற்றி கொண்டு உயிர்த்தெ ழுந்த இறைமகன் இயேசு, நாற்பது நாட்கள் தனது சீடர்களை சந்தித்து உறுதிபடுத்திய பின்பு விண்ணேற்றம் அடைகிறார். இந்த உலகை விட்டு செல்லும் முன், எந்நாளும் நம் மோடு இருப்பதாக அவர் வாக்களித்திருக்கிறார். தந்தையாம் இறைவனின் மாட்சிக்காக, தூய ஆவியாரின் துணையோடு கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழ நாம் அழைக்கப்படுகி றோம். முதல் கிறிஸ்தவர்களைப் போன்று, ஆண்டவரின் மாட்சியை உலகெங்கும் பறை சாற்ற நினைவூட்டப்படுகிறோம். கிறிஸ்து இயேசுவின் அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் அனைவரையும் அவரது சீடர்களாக்கும் ஆர்வத்துடன் பணியாற்ற, இத்திருப்பலியில் நாம் வரம் வேண்டுவோம்.

முதல் வாசக முன்னுரை:
விண்ணகத்துக்குரியவர்களே,
     திருத்தூதர் பணிகள் நூலில் இருந்து வாசிக்கப்படும் இன்றைய முதல் வாசகம், இயேசு வின் விண்ணேற்ற நிகழ்வை எடுத்துரைக்கிறது. இயேசு விண்ணேற்றம் அடையும் முன், இறைத்தந்தையின் வாக்குறுதியாகிய தூய ஆவியாரின் வருகைக்காக காத்திருக்குமாறு சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார். உலகின் கடையெல்லை வரைக்கும் இயேசுவுக்கு சான்று பகர நாம் அழைக்கப்படுகிறோம். இயேசு உலகின் முடிவில் மீண்டும் வருவார் என்ற முன் னறிவிப்பு வானதூதர்கள் வழியாக வழங்கப்படுகிறது. கிறிஸ்துவின் வல்லமையாகிய தூய ஆவியாரின் வருகைக்கு நம்மைத் தயார் செய்யும் வரம் வேண்டி இந்த வாசகத்தை கவனமுடன் செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
விண்ணகத்துக்குரியவர்களே,
  புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் இருந்து இடம்பெறும் இன்றைய இரண்டாம் வாசகம், நம்மில் செயலாற்றும் இறை வல்லமையின் மேன்மையை உணர நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற தன்னையே அர்ப்பணித்த இயேசு, அனைத்துக்கும் மேலான மாட்சியைப் பெற்றிருப்பதை புனித பவுல் எடுத்துரைக்கிறார். தலையாகிய கிறிஸ்துவுக்கு பணிந்து அவரது உடலாக வாழ திருச் சபையின் மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து வழியாக கடவுள் அளிக்கும் உரிமைப்பேற்றை நிறைவாகப் பெற வரம் வேண்டி இவ்வாசகத்தை கவனமுடன் செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. எல்லாம் வல்லவரே இறைவா,
   திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமது திருமகனின் உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகியவற்றின் நற்செய்தியை உலக மக்கள் அனைவருக்கும் வழங்க உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. விண்ணில் வாழ்பவரே இறைவா,
   மண்ணக இன்பங்களுக்கு அடிமையாகி, விண்ணக வாழ்வைப் பற்றிய சிந்தனையின்றி வாழ்கின்ற மக்கள் அனைவரும், உமது திருமகனின் உயிர்ப்பிலும் விண்ணேற்றத்திலும் உம்மைக் கண்டுணர உதவுமாறு உம்மை
மன்றாடுகிறோம்.
3. தலைசிறந்த அரசரே இறைவா,
   எம் நாட்டு மக்களும், தலைவர்களும் உம் திருமகன் இயேசுவின் இறைத்தன்மையை ஏற்றுக்கொள்ளவும், அவர் அறிவித்த விண்ணரசில் பங்கேற்க ஆர்வம் காட்டவும், தேவை யான மனமாற்றத்தை தந்து உதவுமாறு
உம்மை மன்றாடுகிறோம்.
4. புதுமைகளின் நாயகரே இறைவா,
   எங்கள் ஆண்டவர் இயேசு
விண்ணுலகிலும் மண்ணுலகிலும் கொண்டிருக்கும் அதிகா ரத்தால், உலக மக்களின் உடல், உள்ள, ஆன்ம நோய்களை குணமாக்கும் பணியை திருச் சபை ஆர்வமாக செய்ய உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் தலைவரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், விண்ணக வாழ்வை உரித்தாக்கும் மனநிலையுடன் கிறிஸ்துக்கு சான்று பகரும் நற்செய்திப் பணியாளர்களாக வாழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.