Thursday, May 8, 2014

மே 11, 2014

உயிர்ப்பு காலம் 4-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
"ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டே நான் வந்துள்ளேன்."
இயேசுவுக்குரியவர்களே,
   உயிர்ப்பு காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் நல்லாயன் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். நம் ஒவ்வொருவரையும் அறிந்து வைத்திருக்கும் நல்ல ஆயரான இயேசுவின் குரலுக்கு செவிகொடுத்து வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. வாயில் வழியாக நுழையாமல், வேறு வழியாக ஏறிக் குதிக்கும் திருட ரிடமும் கொள்ளையரிடமும் சிக்கிக் கொள்ளாமல், நல்ல ஆயரான இயேசுவின் பாது காப்பில் வாழ அழைக்கப்படுகிறோம். ஆட்டுக் கொட்டிலின் வாயிலாக விளங்கும் நம் ஆண்டவரில் நம்பிக்கை வைக்கும்போது, நாம் வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும். நல்ல ஆயரான இயேசுவைப் பின்தொடர்ந்து, நிறைவாழ்வைப் பெற்றுக்கொள்ளும் ஆடு களாக வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இயேசுவுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், திருத்தூதர்கள் பேதுருவின் மறையுரையால் மூவாயிரம் பேர் மனந்திரும்பி திருமுழுக்கு பெற்ற நிகழ்வை எடுத்துரைக்
கிறது. சிலுவையில் அறையப் பட்ட இயேசுவே மெசியா என்பதை எருசலேமில் இருந்த இஸ்ரயேல் மக்களிடையே பேதுரு பறைசாற்றுகிறார். அவரது போதனை மக்களின் உள்ளத்தை ஊடுருவி, அவர்களை இயேசுவின் மந்தையில் இணைத்ததைக் காண்கிறோம். திருத்தூதரின் வார்த்தையை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெற் றார்கள் என அறிகிறோம். நாமும் மற்றவர்கள் முன்னிலையில் இயேசுவுக்கு வல்லமை யுடன் சான்று பகர வரம் வேண்டி இந்த வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இயேசுவுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு, கிறிஸ்து இயேசுவின் அடிச் சுவடுகளைப் பின்பற்ற அழைப்பு விடுக்கிறார். நமக்காக
துன்புற்ற ஆண்டவரின் முன் மாதிரியைக் கண்முன் கொண்டு, துன்புறுத்தல்களின் நடுவிலும் பொறுமையுடன் நடந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். சிலுவையில் நமது பாவங்களை சுமந்து தீர்த்த இயேசுவின் காயங்களால் நாம் குணமடைந்துள்ளோம் என திருத்தூதர் எடுத்துரைக்கிறார். நம் ஆயரும் கண்காணிப்பாளருமான இயேசுவின் அரவணைப்பில் வாழுமாறு பேதுரு நமக்கு நினைவூட்டுகிறார். கிறிஸ்துவின் மந்தையில் தூய்மை நிறைந்த ஆடுகளாக வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நல்ல ஆயரே இறைவா,
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், பல்வேறு சபைகளாக பிரிந்து வாழும் கிறிஸ்தவர்களை உமக்கு உகந்த ஒரே மந்தையாக ஒருங்கிணைக்க உதவு மாறு உம்மை மன்றாடுகிறோம்.

2. உண்மை ஆயரே இறைவா,
   தவறானவற்றை தெய்வங்களாக கருதி வழிபடும் மக்கள் அனைவரும், நீர் ஒருவரே கடவுள் என்பதை அறிந்து மனம் திரும்பவும் உமது மந்தையில் ஒன்றிணையவும்
உதவு மாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. நீதியின் ஆயரே இறைவா,
   எம் நாட்டை வழிநடத்த இருக்கும் புதிய அரசின் தலைவர்
கள், நீதியோடும் நேர்மை யோடும் மக்களை ஆட்சி செய்யவும், உமது திருச்சபை வளர துணை நிற்கவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. நேரிய ஆயரே இறைவா,
   பணம், பதவி, போதை, வன்முறை ஆகியவற்றின் மீதான ஆர்வத்தால், பிறருடைய நிம்மதியை கெடுப்பவர்கள் அனைவரும், நல்லவர்களாக மனம் மாற உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. கனிவின் ஆயரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம்மைப் பின்தொட ரும் நல்ல ஆடுகளாகவும்,
உமது உயிர்ப்பின் சாட்சிகளாகவும் வாழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.