Thursday, May 22, 2014

மே 25, 2014

பாஸ்கா காலம் 6-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
"என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார்."
ஆண்டவருக்குரியவர்களே,
   இறைமகன் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். நாம் இயேசுவுக்குள்ளும் அவர் நமக்குள்ளும் இருக்கின்ற உண்மையை உணர்ந்து வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம்மோடு என்றும் இருக்கும்படியாக தூய ஆவியார் என்ற துணை யாளரை இயேசு நமக்கு அளித்துள்ளார். தூய ஆவியாரால் வழிநடத்தப்படும் கிறிஸ்தவர் களாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்குள் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த அழைப்புக்கு ஏற்ப இயேசுவின் கட்டளைகளை கடைப்பிடித்து, கடவுளை அன்பு செய்கிற வர்களாக வாழ வரம் வேண்டி இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், யூதர்களால் வெறுக்கப்பட்ட சமாரிய மக்கள் தூய ஆவியால் நிரப்பப்பட்ட நிகழ்வை எடுத்துரைக்கிறது. திருத்தொண்டர்களுள் ஒருவரான பிலிப்பு சமா ரியா நகரில் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து, அரும் அடையாளங்களையும் செய் தார். இதனால் அந்நகர மக்கள் மனந்திரும்பி இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொண்டனர். திருத்தூதர்கள் பேதுருவும் யோவானும் அவர்கள்மீது கைகளை வைக்கவே, அவர்கள் தூய ஆவியைப் பெற்றுக்கொள்வதைக் காண்கிறோம். ஆயர்களின் அதிகாரம் திருத்தூதர்களி டம் இருந்தே வருகிறது என்பதை உணர வரம் வேண்டி, இந்த வாசகத்தை கவனமுடன் செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு, துன்பங்கள் நேரிட்டாலும் இயேசு வின் பெயரால் நன்மை செய்ய அழைப்பு விடுக்கிறார். கிறிஸ்து இயேசுவே நம் ஆண்டவர் என்பதை நம் உள்ளத்தில் இருத்தி, அவரைப் போற்றுமாறு அறிவுறுத்துகிறார். பிறரிடம் மரியாதையோடும் பணிவோடும் நடந்துகொள்ளவும், குற்றமற்ற மனச்சான்று உடையவர் களாய் திகழவும் வலியுறுத்துகிறார். நீதியற்றவர்களுக்காக இறந்த நம் ஆண்டவர் இயேசு வைப் பின்பற்றி வாழ அழைக்கப்படுகிறோம். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்கு ஏற்ப
ஆவிக் குரிய இயல்பு உடையவர்களாய் வாழ வரம் வேண்டி இந்த வாசகத்தை கவனமுடன் செவி யேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. அன்பின் ஊற்றே இறைவா,
  
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகியோரின் வழியாக உமது அன் பின் நற்செய்தி விரைந்து பரவவும், மக்கள் அனைவர் மீதும் தூய ஆவியார் பொழியப்பட வும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பின் அரசே இறைவா,
  உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் போர், வன்முறை ஆகியவற்றின் வழி களைக் கைவிட்டு, மக்களை அன்பிலும் அமைதியிலும் வழிநடத்த உதவுமாறு உம்மை
மன்றாடுகிறோம்.
3. அன்பின் நிறைவே இறைவா, 
   எம் நாட்டில் புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசின் பிரதமரையும் அமைச்சர்களையும் நிறைவாக ஆசீர்வதித்து, மக்களை உண்மையின் பாதையில் வழிநடத்தும் விவேகத்தை வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. அன்பு பொழிபவரே இறைவா,
   உலகில் பசி,
நோய், வறுமை, அடக்குமுறை போன்றவற்றால் துயருறும் மக்கள் அனை வரும், உமது அன்பின் அரவணைப்பில் புதிய விடியலைக் காண உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. அன்பு தந்தையே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், தூய ஆவியாரின் துணையுடன் உமது கட்டளைகளைக் கடைபிடித்து, உண்மையின் சாட்சிகளாகத் திகழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.