Thursday, June 12, 2014

ஜூன் 15, 2014

மூவொரு இறைவன் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   மூவொரு இறைவன் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மனித அறிவுக்கு எட்டாத மறைபொருளாகிய இறைவனின் இயல்புக்கு திருச்சபை இன்று விழா எடுக்கிறது. நித்திய வாக்கான இறைமகன் வழியாக இந்த உலகைப் படைத்த தந்தையாம் கடவுள், அவர் வழியாகவே இதை மீட்கத் திருவுள மானார். இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுமாறு, தூய ஆவியாரின் வல்ல மையால் இறைமகன் இயேசு மனிதரானார் என்ற மீட்பு செயல்பாட்டிலேயே இறைவனின் மூன்று ஆட்களை நாம் அடையாளம் கண்டு கொள்கிறோம். தந்தையுடையவை யாவும் மகனுடையவை; அவர்களது முழு உண்மையை நோக்கி தூய ஆவியார் நம்மை வழி நடத்துகிறார். மூவொரு இறைவனாகிய தந்தை, மகன் தூய ஆவியாரிடம் உலக மக்கள் அனைவரும் நம்பிக்கை கொள்ள வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் சீனாய் மலை மேல் தமது மாட்சியை மோசேக்கு வெளிப்படுத்தியதைக் காண்கிறோம். ஆண்டவர் இரக்கமும் பரிவும் உள்ள இறைவன், சினம் கொள்ளத் தயங்குபவர், பேரன்புமிக்கவர், நம்பிக்கைக்குரியவர் என்ற உண்மை அறிவிக்கப்படுகிறது. கடவுளின் முன்னிலையில், மோசே தரைமட்டும் தாழ்ந்து வணங்கி இஸ்ரயேல் மக்களுக்காகப் பரிந்து பேசிய நிகழ்வு இங்கு எடுத்துரைக் கப்படுகிறது. நமது பாவங்களை மன்னித்து, நம்மை அவரது உரிமைச் சொத்தாக்கிக்கொள் ளுமாறு ஆண்டவரிடம் வேண்டி இந்த வாசகத்துக்கு கவனமாக செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். நமது நடத்தை யைச் சீர்படுத்தி, திருச்சபையின் மக்களுடன் மன ஒற்றுமையுடன் வாழ அறிவுறுத்து கிறார். கிறிஸ்து இயேசு வழியாக கடவுளிடம் நம்பிக்கை கொண்டிருக்கும் நாம், தூய இறைவனின் மக்களாக வாழ அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் நம் அனைவரோடும் இருக்க வரம் வேண்டி இந்த வாசகத்துக்கு கவனமாக செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. அப்பா, தந்தையே இறைவா,
   திருச்சபையின் மக்களை வழிநடத்தும்
திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மறைபொருளாகிய உமது உடனிருப்பை உணர்ந்து வாழவும், உலக மக் களை ம்மிடம் ஈர்க்கவும் அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. விண்ண தந்தையே இறைவா,
   இவ்வுலகில் வாழும் மாந்தர் அனைவரும், மூவொரு இறைவனாகிய நீரே உண்மை கடவுள் என்பதை அறிந்துகொள்ளவும், உமது பிள்ளைகளாக அன்பிலும் நீதியிலும் ஒற்று மையிலும் வாழவும் உதவுமாறு உம்மை
மன்றாடுகிறோம்.
3. வானக அரசரே இறைவா,
   உமது உண்மையின் அரசைப் புறக்கணித்து, உலகைச் சார்ந்த தங்கள் சொந்த விருப்பங் களி
ல் நாட்களை செலவிடும் எம் நாட்டு மக்கள் அனைவரும், நிலை வாழ்வைப் பற்றிய உண்மைகளை விரும்பித் தேதுணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. ஒற்றுமை அருள்பவரே இறைவா,
   உலகெங்கும் மதம், இனம், மொழி, பண்பாடு என பல்வேறு காரணங்களால் பிரிந்து வாழும் மக்கள் அனைவரும், ஒரே கடவுளாகிய உமது பிள்ளைகள் என்ற உண்மையை உணர்ந்து ஒற்றுமையில் வளர
உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. மூவொரு இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம் மீதான விசுவா சத்தி
லும் அன்பிலும் வளரவும், உமக்கு விருப்பமான பிள்ளைகளாக வாழவும் தேவை யான வரங்களைப் பொழியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.