Thursday, June 26, 2014

ஜூன் 29, 2014

புனித பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   திருத்தூதர்களான பேதுரு, பவுல் ஆகியோரின் பெருவிழா திருப்பலிக்கு உங்களை அன் போடு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். திருச்சபையின் இரு தூண்களாக விளங் கும் இந்த திருத்தூதர்கள், யூதர்களிடையிலும் பிற இனத்தார் நடுவிலும் கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்தவர்கள். நம் ஆண்டவர் மீது இவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையே தொடக் கத் திருச்சபையின் வளர்ச்சிக்கு உரமூட்டியது. தடைசெய்யவும் அனுமதிக்கவும் இயேசு கிறிஸ்து வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையில், திருச்சபையின் முதல் தலைவராக செயல்பட்டவர் புனித பேதுரு. ஆண்டவரால் தடுதாட்கொள்ளப்பட்டு, பிற இனத்தாரின் திருத்தூதராக விளங்கியவர் புனித பவுல். கிறிஸ்துவுக்காக உயிரையே இழக்கத் துணிந்த இந்த திருத்தூதர்களைப் பின்பற்றி, இயேசுவின் சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி, இத் திருப்பலியில் நாம் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே, 
     இன்றைய முதல் வாசகம், சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருத்தூதர் பேதுருவை ஆண்டவரின் தூதர் விடுவித்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. திருத்தூதர் யாக்கோபு கொலை செய்யப்பட்டது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்ட ஏரோது அரசன், திருத் தூதர் பேதுருவையும் கைது செய்கிறான். காவலில் வைக்கப்பட்டிருந்த பேதுருவுக்காக திருச்சபையின் மக்கள் கடவுளிடம் உருக்கமாக வேண்டுவதைக் காண்கிறோம். அதன் கார ணமாக, வானதூதர் ஒருவர் திருத்தூதர் பேதுருவை சிறையில் இருந்து விடுவிக்கிறார். செபத்தின் வலிமையை இங்கு காண்கிறோம். நாமும் திருச்சபையின் மேய்ப்பர்களுக்காக தொடர்ந்து செபிக்கும் வரம் வேண்டி இவ்வாசகத்துக்கு கவனமுடன் செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவருக்காக தமது வாழ்வை அர்ப்பணித்தது குறித்து எடுத்துரைக்கிறார். விசுவாசத்தைக் காத்து நிற்கும் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், தமது நேரிய வாழ்வுக்காக ஆண்டவர் வெற்றி வாகை யைத் தருவார் என்றும் அவர் குறிப்பிடுகிறார். பிற இனத்தாரிடையே நற்செய்தி அறிவிக்க தமக்கு வலுவூட்டியவர் ஆண்டவரே என்பதை அவர் அறிக்கையிடுகிறார். தீங்கு அனைத் திலும் இருந்து தம்மைக் காத்து ஓட்டத்தை முடிக்க உதவிய கடவுள், மீட்பை பரிசாக அளிப்பார் என்ற உறுதியை வெளிப்படுத்துகிறார். கிறிஸ்துவின் ஆட்சி மலர நம்மையே பலியாக்கும் வரம் வேண்டி இவ்வாசகத்துக்கு கவனமுடன் செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. துணிவைத் தருபவரே இறைவா,
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உலகின் எதிர்ப்புக ளுக்கு அஞ்சாமல் உமது நசெய்தியின் வழியை வாழ்வாக்கவும், மக்கள் முன்னிலையில் சான்று பகரவும் துணிவை
அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. ஆற்றல் அளிப்பவரே இறைவா,
   திருத்தூதர்களான பேதுரு, பவுல் ஆகியோரைப் போன்று, கிறிஸ்தவர்கள் அனைவரும் உ
ம் மீதான நம்பிக்கையில் நிலைத்திருக்கவும், இவ்வுலக மக்களிடையே கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழவும் ஆற்றல் அளிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. மாற்றம் தருபவரே இறைவா,
   உலகம் முழுவதும் உம் திருமகனின் திருச்சபையைத் துன்புறுத்தி அழிக்க நினைக்கும் தீயோர் அனைவரையும் மனந்திருப்பி, புனித பவுலைப் போன்று திருச்சபையின் வளர்ச்சிக் கான கருவிகளாக மாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. ஒற்றுமை அளிப்பவரே இறைவா,
   சிறுசிறு சபைகளாக பிளவுபட்டு நிற்கும் கிறிஸ்தவ சமூகங்கள் அனைத்தும், புனித பேதுரு என்ற பாறை மீது எங்கள் ஆண்டவர் இயேசு கட்டியெழுப்பிய ஒரே திருச்சபைக் குள் விரைவில் ஒன்றிணைய
உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. உண்மையின் ஊற்றே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், திருத்தூதர்களின் முன்மாதிரியான விசுவாச வாழ்வைப் பின்பற்றி உம் திருமகன் இயேசுவின் உண்மை யான சாட்சிகளாகத் திகழ
வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.