Thursday, June 5, 2014

ஜூன் 8, 2014

தூய ஆவியாரின் வருகை பெருவிழா

திருப்பலி முன்னுரை:
"தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்."
இறை ஆவிக்குரியவர்களே,
   தூய ஆவியாரின் வருகை பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விண்ணகம் செல்லும் முன்பு, சீடர்கள் மேல் ஊதி, தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுமாறு பணித்தார். இயேசு விண்ணேற்றம் அடைந்த பத்தாம் நாளில் கொடுங்காற்றைப் போன்றதோர் இரைச்சலின் நடுவே, தூய ஆவியார் பிளவுற்ற நெருப்பு நாவுகளின் வடிவில் சீடர்கள் மீது இறங்கினார். தூய ஆவி யாரின் ஆற்றலால் மனவுறுதி பெற்ற திருத்தூதர்கள் பறைசாற்றிய நற்செய்தியால் முதல் கிறிஸ்தவ சமூகம் திருமுழுக்கு பெற்ற நாளை இன்று நாம் கொண்டாடுகிறோம். திருச் சபையின் பிறந்த நாளான இன்று, கிறிஸ்துவுக்கு சான்று பகரும் வரத்துக்காக தூய ஆவி யாரின் ஆற்றலை வேண்டி, இத்திருப்பலியில் நாம் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
ஆவிக்குரியவர்களே, 
     இன்றைய முதல் வாசகம், அன்னை மரியா மேலும், திருத்தூதர்கள் மீதும் தூய ஆவி இறங்கிவந்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட சீடர்கள், திருத்தூதர் பேதுருவின் தலைமையில் நற்செய்தியைப் பறைசாற்றுவதையும், அவர்கள் பல்வேறு மொழிகளில் பேசுவதைக் கேட்டு மக்கள் வியப்படைவதையும் இங்கு காண் கிறோம். திருத்தூதர்களின் வார்த்தைகளால் உள்ளம் குத்தப்பட்டு, மூவாயிரம் பேர் அன்று திருமுழுக்கு பெற்றார்கள் என அறிகிறோம். தூய ஆவியாரின் ஆலயங்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாம், ஆவிக்குரிய வல்லமையுடன் கிறிஸ்துவுக்கு சான்று பகர வரம் வேண்டி இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஆவிக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், தூய ஆவியாரின் தூண்டுதலின்றி யாரும் இயேசுவை ஆண்டவர் என அறிக்கையிட முடியாது என்பதை எடுத்துரைக்கிறார். இவ்வாறு ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்விலும், தூய ஆவியாரின் செயல்பாடு இருப் பதை அவர் விளக்குகிறார். திருமுழுக்கின் வழியாக நாம் பெற்ற தூய ஆவியார், நம்மை கிறிஸ்துவின் ஒரே உடலாய் ஒன்றிணைக்கிறார் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். தூய ஆவி என்னும் ஊற்று நீரை பானமாக பருகியுள்ள நாம் அனைவரும், பிளவுபடா உள்ளத்தோடு வாழ வரம் வேண்டி இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஆவியைப் பொழிபவரே இறைவா,
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் உம் தூய
ஆவி யால் நிரப்பி, உம் திருமகனின் திருச்சபையை அருள் வாழ்வில் செழித்தோங்கச் செய்யும் அருளாற்றலைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. புதுவாழ்வு அளிப்பவரே இறைவா,
   இவ்வுலகப் பொருட்களில் நாட்டம் கொண்டு, உண்மை வடிவாகிய உம்மைப் புறக்க ணித்து வாழும் உலக மக்கள் அனைவர் மீதும்
உமது ஆவியைப் பொழிந்து, அருள் வாழ் வின் ஆர்வத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்மை ஒளியே இறைவா,
   எம் நாட்டு மக்கள் மீதும், தலைவர்கள் மீதும் உமது ஆவியைப் பொழிந்து, உமது மீட்பின் பாதையில் பயணம் செய்யும் ஒளியின் மக்களாக செயல்படத் தேவையான மனமாற் றத்தை உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. பிரிந்ததை இணைப்பவரே இறைவா,
   கிறிஸ்துவின் பெயரால் பல்வேறு சபைகளாக வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், தூய ஆவியா
ரின் வல்லமையால் ஒன்றிணைந்து, ஒரே திருச்சபையாக கிறிஸ்துவுக்கு சான்று பகர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. எம்மில் செயலாற்றுபவரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், தூய ஆவியாரின் ஆலயங்களாக வாழ்ந்து, எங்கள் சொற்களாலும் செயல்களாலும் கிறிஸ்து இயேசுவுக்கு சான்று பகரும்
வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.