திருவருகைக்காலம் 3-ம் ஞாயிறு 
முதல் வாசகம்: எசாயா 61:1-2,10-11
இரண்டாம் வாசகம்: 1 தெசலோனிக்கர் 5:16-24 
   சகோதர சகோதரிகளே, எப்பொழுதும்,   மகிழ்ச்சியாக இருங்கள்.  இடைவிடாது இறைவ னிடம்   வேண்டுங்கள்.  எல்லாச் சூழ்நிலையிலும்   நன்றிகூறுங்கள்.  உங்களுக்காக   கிறிஸ்து இயேசு வழியாய் கடவுள்   வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.  தூய ஆவியின்   செயல் பாட்டைத் தடுக்க வேண்டாம்.  இறைவாக்குகளைப்   புறக்கணிக்க வேண்டாம்.  அனைத்தை யும்   சீர்தூக்கிப்பாருங்கள்.  நல்லதைப்   பற்றிக்கொள்ளுங்கள்.  எல்லா வகையான தீமை களையும்   விட்டு விலகுங்கள்.  அமைதி அருளும் கடவுள்தாமே   உங்களை முற்றிலும்   தூய்மையாக்குவாராக.  அவரே நம்   ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது   உங்களு டைய உள்ளம், ஆன்மா, உடல்   அனைத்தையும் குற்றமின்றி   முழமையாகக் காப்பாராக!  உங்களை அழைக்கும் அவர்   நம்பிக்கைக்குரியவர்.  அவர் இதைச்   செய்வார்.
நற்செய்தி வாசகம்: யோவான்  1:6-8,19-28
சிந்தனை: வத்திக்கான் வானொலி 
      
   கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான்.  அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும்  லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, 'நீர் யார்?' என்று கேட்டபோது அவர், 'நான் மெசியா அல்ல' என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.   அப்போது, 'அப்படி யானால் நீர் யார்? நீர் எலியாவா?' என்று அவர்கள்  கேட்க, அவர், 'நானல்ல' என்றார். 'நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?'  என்று கேட்டபோதும், அவர், 'இல்லை' என்று மறுமொழி கூறினார்.   அவர்கள் அவரிடம், 'நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி  சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?' என்று  கேட்டார்கள்.   அதற்கு அவர், '"ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப்  பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது″  என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது  என்னைப்பற்றியே' என்றார்.  பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்  அவரிடம், 'நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?' என்று கேட்டார்கள்.  யோவான் அவர்களிடம், 'நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்;  அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை' என்றார்.   இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன.  அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
சிந்தனை: வத்திக்கான் வானொலி
 
       

