Thursday, April 10, 2014

ஏப்ரல் 13, 2014

திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

திருவழிபாட்டு முன்னுரை:
கிறிஸ்துவுக்குரியவர்களே,
   நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு திருவழிபாட்டு நிகழ்வுகளுக்கு உங்களை வரவேற்கின்றோம். "தாவீதின் மகனுக்கு ஓசன்னா!" - "ஆண்ட வரே எங்களை விடுவித்தருளும்!" என்ற ஆர்ப்பரிப்போடு தொடங்கிய இயேசுவின் எருச லேம் பயணம், "பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை" என்ற ஏள னப் பேச்சோடு முடிவுக்கு வந்ததை இன்று நாம் தியானிக்க இருக்கிறோம். அமைதியின் அரசராய் கழுதை மீது பவனி வந்த இயேசு, கடவுளின் ஆட்டுக்குட்டியாய் கல்வாரியில் தம்மை பலியாக்குவதை காண்கிறோம். மரக்கிளைகளை வெட்டிப்போட்டு, தங்கள் மேலா டைகளை வழியில் விரித்து இயேசுவை வரவேற்ற அதே இஸ்ரயேல் மக்கள், அவரது ஆடைகளைக் களைந்து சிலுவை மரத்தில் தொங்கவிட்ட கொடூரக் காட்சியை நினைவுக்கு கொண்டு வருகிறோம். இறைத்தந்தையின் திட்டப்படி இறைவாக்கினர் உரைத்தது நிறை வேறுமாறு, நமது பாவங்களுக்காக இறைமகன் இயேசு மரணம் வரை கீழ்ப்படிந்தார். கடவுளின் திட்டத்தை செயல்படுத்த நம்மை முழு மனதோடு அர்ப்பணிக்கும் வரம் கேட்டு, இந்த திருவழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
கிறிஸ்துவுக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயா கிறிஸ்துவின் திருப்பாடுகளை முன்னறிவிப்பதை காண்கிறோம். கிறிஸ்துவின் தாழ்ச்சியும் பொறுமையும் இங்கு தெளி வாக எடுத்துரைக்கப்படுகிறது. அடிப்போருக்கு தன் முதுகையும், தாடியைப் பிடுங்குவோ ருக்கு தன் தாடையையும் அவர் ஒப்புவித்தார். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ் வோருக்கும் தன் முகத்தை மறைக்கவில்லை. தந்தையாம் இறைவனில் நம்பிக்கை கொண்டவராய் தன்னை சிலுவை மரணத்துக்கு கையளித்த இயேசுவை பின்பற்றி வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு நாம் செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கிறிஸ்துவுக்குரியவர்களே,
     இன்றைய இரண்டாம் வாசகமும், நம் ஆண்டவர் இயேசுவின் தாழ்ச்சியை பற்றி பேசு கிறது. கடவுள் வடிவில் விளங்கிய அவர், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார் என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகள் நம்மை சிந்திக்க தூண்டுகின்றன. சிலுவை மரணம் வரை இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றத் துணிந்த இயேசுவைப் பின்பற்ற நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் சிலுவை வழியை தொடர்ந்து சென்று, அவரது மாட்சியில் பங்குபெற வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மாட்சி அளிப்பவரே இறைவா,
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும்
உமது திருவு ளத்தை கீழ்ப்படிதலுடன் நிறைவேற்றி சான்றுபகரும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நிறைவு தருபவரே இறைவா,
   சிலுவையில் தம்மையே பலியாக்கிய கிறிஸ்து இயேசுவில் உமது திட்டத்தின் நிறை வினைக் கண்டுணர, உலக மக்கள் அனைவருக்கும் ஞானமருள
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மீட்பு வழங்குபவரே இறைவா,
   கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் வழியாக மனித குலத்துக்கு நீர் அளித்த மீட்பை சுவைத்து மகிழும் வரத்தை எம் நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. இரக்கம் காட்டுபவரே இறைவா,
   எம்மை குணப்படுத்துவதற்காக காயப்பட்ட இயேசுவின் பாடுகள் வழியாக, எங்கள் உடல், உள்ள, ஆன்ம நோய்களை குணப்படுத்தி புது வாழ்வருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. அருள் பொழிபவரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர் வதித்து, கிறிஸ்துவின் சிலுவை வழியைப் பின்பற்றி வாழும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.