Thursday, April 3, 2014

ஏப்ரல் 6, 2014

தவக்காலம் 5-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
   உயிரும் உயிர்ப்புமான ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன் புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறை சிறப்பிக்கிறோம்.
நம் ஆண்டவர் உயிர்த்தெழுதலும் வாழ்வுமாய் இருக்கிறார் என்ற உண்மையை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நண்பரின் இறப்புக்காக, ஆண்டவர் இயேசு கண்ணீர் விட்டு அழுததை இன்றைய நற்செய்தி சுட்டிக் காட்டுகிறது. பாவத்தினால் நாம் கடவுளின் அருள் உயிரை இழக்கும் போதெல்லாம் ஆண்டவர் நமக்காக கண்ணீர் வடிக்கிறார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இறந்த லாசரை, இயேசு மீண்டும் உயிர்த் தெழச் செய்ததையும் நாம் காண்கிறோம். நாம் பாவத்தினால் அருள் வாழ்வில் இறந்தா லும், நம்மை உயிர்ப்பிக்க ஆண்டவர் தயாராக இருக்கிறார் என்பதை உணர அழைக்கப்படு கிறோம். கிறிஸ்து இயேசுவின் வல்லமையால் பாவத்தில் இருந்து உயிர்த்தெழுந்து புது வாழ்வு வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக பேசும் ஆண்ட வர், உயிர்ப்பை பற்றிய நம்பிக்கையை கொடுக்கிறார். இஸ்ரயேலரின் கல்லறைகள் திறக் கப்பட்டு, அவர்கள் மேலே கொண்டுவரப்படுவார்கள் என்ற வாக்குறுதி வழங்கப்படுகிறது. தமது ஆவியைப் பொழிந்து உயிர் அளிப்பதாகவும், அவர்களது சொந்த நாட்டில் குடியமர்த் துவதாகவும் ஆண்டவர் உரைக்கிறார். ஆண்டவரின் உயிரளிக்கும் வல்லமையை உணர்ந் தவர்களாய், பாவத்தில் இருந்து மனமாற்றம் பெற வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், இவ்வுலகு சார்ந்த ஊனியல்பின் இச்சைகளில் இருந்து விடுபட அழைப்பு விடுக்கிறார். கடவுளின் ஆவியைக் கொண்டிருக் கும் நாம், ஊனியல்புக்கு எதிரான தூய வாழ்வு வாழ அறிவுறுத்துகிறார். தூய ஆவியின் வல்லமையினால் நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாற அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து இயேசுவின் உயிரைப் பெற்றுள்ள நாமும் உயிர்ப்பின் சாட்சிகளாக வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. உயிரளித்து காப்பவரே இறைவா,
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் விசுவாச வாழ்வில் புத்துயிர் பெற்று, உலக மக்கள் முன்னிலையில் உமது சாட்சிகளாகத் திகழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. வாழ்வளித்து வழிநடத்துபவரே இறைவா,
   உம் மீது நம்பிக்கை இல்லாமலும், உம்மைப் பற்றிய தவறான எண்ணங்களாலும், ஆன் மீக வாழ்வில் இறந்தவர்களாய் வாழும் மக்களிடையே விசுவாசத்தின் ஒளியை ஏற்ற உத வுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. கல்லறையைத் திறப்பவரே இறைவா,
   உண்மை கடவுளாகிய உம்மைப் புறக்கணித்து நடைபிணங்களாய் வாழும் எம் நாட்டு மக்கள் அனைவரும், தங்கள் மீது கட்டி எழுப்பியுள்ள கல்லறைகளில் இருந்து வெளியேறி உமது மாட்சியைக் காண உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. ஆவியைப் பொழிபவரே இறைவா,
   சிந்தனை, சொல், செயல் அனைத்தாலும் பாவங்கள் செய்து, உமது அருளுயிரை இழந்து தவிக்கும் மக்கள் அனைவருக்கும் உமது தூய ஆவியால் புத்துயிர் அளித்து உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. புதுவாழ்வு தருபவரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், பாவத்தின் கல்லறை யில் இருந்து வெளியேறவும், நீர் வழங்கும் புத்துயிரைப் பெற்று உயிர்ப்பின் சாட்சிகளாக வாழவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.