Thursday, July 11, 2013

ஜூலை 14, 2013

பொதுக்காலம் 15-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அடுத்திருப்பவர்களே,
   பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இறையன்பு மற்றும் பிறரன்பு கட்டளைகளை நம் வாழ்வில் செயல் படுத்த இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது. நம்மை நாமே நேர்மையாளர்களாக எண்ணிக் கொள்ளாமல், கடவுளின் முன்னிலையில் நாம் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் விருப்பம். இயேசுவின் வழியில், கடவுளுக்கும் மற்ற மனிதர்களுக்கும் அடுத்திருப்பவர்களாய் வாழ அழைக்கப்படுகிறோம். எரிகோ செல்லும் பாதையில் அடிபட்டுக் கிடந்தவரை கண்டுகொள்ளாமல் சென்ற யூத குருவையும், லேவி யரையும் போன்று மனிதநேயம் இல்லாதவர்களாய் நடந்துகொண்ட தருணங்களுக்காக மன்னிப்பு வேண்டுவோம். நல்ல சமாரியரைப் போன்று, தேவையில் இருப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களாய் வாழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அடுத்திருப்பவர்களே,
   இன்றைய முதல் வாசகம், மோசே வழியாக ஆண்டவர் விடுக்கும் அழைப்பை எடுத் துரைக்கிறது. முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடவுளிடம் திரும்ப நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரால் கொடுக்கப்பட்ட கட்டளைகளையும் நியமங்களை யும் கடைபிடித்து வாழ மோசே அழைக்கிறார். கடவுளின் கட்டளையைத் தேடி விண் ணகத்துக்கோ, கடல் கடந்தோ நாம் செல்ல வேடியதில்லை என்பதை மோசே உணர்த்து கிறார். அது இறைவார்த்தையில் நம் அருகிலேயே உள்ளதை உணர்ந்து வாழ அழைக்கப் படுகிறோம். கட்டளைகளை கடைப்பிடித்து இறை உறவிலும், மனித உறவிலும் வளர வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அடுத்திருப்பவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்து வழியாக நாம் கடவு ளோடு ஒப்புரவாக்கப்பட்டிருப்பதைப் பற்றி பேசுகிறார். படைப்புகள் அனைத்தும் கிறிஸ்து இயேசுவுக்காக, அவர் வழியாகவே படைக்கப்பட்டன என்பதை உணர பவுல் அழைப்பு விடுக்கிறார். திருச்சபையின் தலையாக இருக்கும் கிறிஸ்துவின் வழியாகவே அனைத் தும் இணைந்து நிலைபெறுகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். கடவுளின் முழு நிறைவான கிறிஸ்து இயேசுவின் வழியாக, பிற மனிதர்களுடனும் கடவுளுடனும் ஒப்புர வாக வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஒப்புரவாக்க அழைப்பவராம் இறைவா,
  
கிறிஸ்துவின் நற்கருணைப் பலியை நிறைவேற்றும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக் கள் அனைவரும், உலக மக்களை உம்மோடு ஒப்புரவாக்கும் பணியை சிறப்பாக ஆற்றும் வரத்தினை வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்புசெய்ய அழைப்பவராம் இறைவா,
   உலகெங்கும் சிற்றின்ப ஆசைகளில் மூழ்கி, எந்திரங்களோடு பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும்
மக்கள், குடும்ப உறுப்பினர்களையும் அருகில் வசிப்பவர்களையும் அன்பு செய்து வாழும் மனநிலையை வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. பணியாற்ற அழைப்பவராம் இறைவா,
   எம் நாட்டில் ஏழ்மை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, போன்ற பல்வேறு பிரச் சனைகளால் கலங்கித் தவிப்போருக்கு உதவிபுரியும் நல்ல அரசியல் தலைவர்களை உரு வாக்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. உதவிபுரிய அழைப்பவராம் இறைவா,
   உலகின் பல பகுதிகளில் உடல் மற்றும் மனக் காயங்களால் அமைதி இழந்து வேதனை யுறும் மக்களை குணப்படுத்த உழைக்கும் நல்லுள்ளம் கொண்டவர்கள் பெருக உதவிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. பின்பற்ற அழைப்பவராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும்
உம் திருமகனைப் பின்பற்றி, இறையன்பாலும் பிறரன்பாலும் உறவுகளை வளர்க்கும் வரம் ஈந்திட வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.