Friday, July 26, 2013

ஜூலை 28, 2013

பொதுக்காலம் 17-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினேழாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இறைவேண்டலின் வல்லமையை உணர்ந்து வாழ இன்றைய திருவழி பாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவர் இயேசு, தந்தையாம் இறைவனிடம் தனி மையாக வேண்டிக் கொண்டிருந்த பல நிகழ்வுகள் நற்செய்திகளில் சொல்லப்பட்டிருக்கின் றன. இன்று தங்களுக்கும் இறைவேண்டல் செய்யக் கற்றுத்தருமாறு, சீடர்கள் இயேசுவி டம் கோரிக்கை வைக்கின்றனர். அவர்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுக் கும் இயேசு, அதன் பயனையும் சுட்டிக்காட்டுகிறார். தொடர்ந்து இறைவேண்டல் செய் வோரின் உள்ளுணர்வுகளை ஆண்டவர் புறக்கணிக்க மாட்டார் என்ற பாடத்தை மனதில் இருத்த நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசுவைப் போன்று இறைவனின் திரு வுளம் நம்மில் நிறைவேற வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், சோதோம் கொமோரா நகரங்களை அழிவில் இருந்து காப் பாற்ற ஆபிரகாம் இறைவேண்டல் செய்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. கொடிய பாவங்க ளுக்காக அழிக்கப்பட இருந்த அந்த நகரங்களை, நீதிமான்களை முன்னிறுத்தி அவர் காப் பாற்ற முயல்வதைக் காண்கிறோம். ஐம்பது, நாற்பது, முப்பது என நீதிமான்களின் எண் ணிக்கையை குறைத்து ஆபிரகாம் பேரம் பேசுவதைக் காண்கிறோம். பத்து பேர் இருந்தால் கூட அந்நகரங்களை அழிக்க மாட்டேன் கடவுள் வாக்களிக்கிறார். நமது வேண்டலுக்கு கனிவோடு பதிலளிக்கும் ஆண்டவருக்கு உண்மை உள்ளவர்களாய் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்து வழியாக நமக்கு வழங் கப்பட்ட பாவ மன்னிப்பைப் பற்றி எடுத்துரைக்கிறார். திருமுழுக்கின் வழியாக நாம் கிறிஸ்துவோடு அடக்கம் செய்யப்பட்டு, அவர் மீதான நம்பிக்கையால் பாவத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளதை பவுல் நினைவூட்டுகிறார். நமது பாவங்களின் கடன் பத்திரம் ஆண்டவர் இயேசுவின் சிலுவை மரணத்தால் அழிக்கப்பட்டுவிட்டதை உணர அழைக்கப் படுகிறோம். நம் பாவங்களை மன்னித்த கிறிஸ்துவின் அருளில் வளர வரம் வேண்டி, இவ் வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. வேண்டலை கேட்பவராம் இறைவா,
  
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமக்கு உகந்தவர்க ளாக வாழவும், உமது திருச்சபையின் புதுவாழ்வுக்காக உழைக்கவும் வரமருள வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மாற்றங்களை தருபவராம் இறைவா,
   உலக நாடுகளில் நிலவும் வன்முறைகளும், கலவரங்களும், உள்நாட்டுப் போர்களும், ஒழுக்கக் கேடுகளும் மறைந்து, உமக்கு உகந்த வாழ்க்கை முறைகள் செழித்தோங்க வர மருள
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அருள்மழை பொழிபவராம் இறைவா,
   எமது நாட்டில் பெருகி வரும் பிரிவினை எண்ணங்களும், வன்முறை கலாச்சாரங்களும், முறைதவறிய ஆசைகளும் அழிந்து, அமைதியை விரும்பும் புதிய சமூகம் உருவாக வர மருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. கருணை காட்டுபவராம் இறைவா,
   உலகின் பல்வேறு சூழ்நிலைகளால் அமைதி இழந்து தவிக்கும் உள்ளங்கள் உமது உதவியைப் பெற்று, இறை இரக்கத்தின் அமைதியை சுவைக்க வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. நன்மை அளிப்பவராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும்
உம் திருவுளம் எம் மில் நிறைவேற அனுமதிக்கவும், அதன் மூலம் பாவத்தின் கட்டுகளில் இருந்து விடுதலை பெற்று புதுவாழ்வு வாழவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.