Wednesday, February 15, 2012

பிப்ரவரி 19, 2012

பொதுக்காலம் 7-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறை இயேசுவில் இனியோரே,
   நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் பொதுக்காலத்தின் ஏழாம் ஞாயிறை சிறப்பிக் கின்றோம். இன்றைய திருவழிபாடு கடவுளின் மாண்புமிக்க செயல்களுக்காக, நாம் அவரைப் புகழ அழைப்பு விடுக்கிறது. அனைத்து விதமான தடைகளையும் தாண்டி இறைவனின் பிரசன்னத்தில் நுழைய இன்று
நாம் கற்றுக்கொள்வோம். அப்பொழுது இறைவன் நம் விசுவாசத்தைக் கண்டு, நமக்கு புது வாழ்வினை வழங்குவார். நமக்கு வரும் துன்பங்கள், நோய்கள் போன்ற இடையூறுகளிலும் கடவுளின் பிரசன்னத்தை நாடி, அவரது மாட்சியின் செயல்களைக் காண வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
இனியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், நமது குற்றங்களை மன்னித்து நமக்கு புது வாழ்வு வழங்குவதாக இறைவன் வாக்களிப்பதை நாம் காண்கிறோம். பாலை நிலத்திலும் பாதை அமைத்து, பாழ் நிலத்திலும் நீரோடைகளைத் தோன்றச் செய்வதாக அவர் வாக்களிக் கின்றார். அவரது மாட்சிமிகு செயல்களைக் கண்டு வியந்து போற்றுபவர்களாய் வாழ உறுதி கொண்டு, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இனியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில், கடவுளின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறு கின்றன என்றும், ஆகவே அவர் புகழுக்குரியவர் என்றும் திருத்தூதர் பவுல் எடுத்துரைக் கிறார். கடவுள் உண்மை உள்ளவராய் இருப்பது போன்று, நாமும் உண்மையுள்ளவர் களாய் வாழும் உறுதியேற்று, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. வாக்குறுதி அளிப்பவராம் இறைவா,
   திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவ ரும் உமது வாக்குறுதிகளுக்கு தகுதி உள்ளவர்களாக வாழ்ந்து, இறைமக்கள் அனைவரை யும் உம் வாக்குறுதிகளுக்கு தகுதி பெறுபவர்களாக மாற்ற உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. புகழுக்கு உரியவராம் இறைவா,
   உலகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் உமது மாட்சிமிகு செயல்கள் அனைத்தையும் மனதார ஏற்று, உண்மை கடவுளாகிய உம்மைப் புகழ்ந்து ஏற்றுக்கொள்ள உதவ வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. புதுவாழ்வு வழங்குபவராம் இறைவா,
   எங்கள் நாட்டில் வாழும் மக்கள் அனைவரும், தங்கள் மதம் மற்றும் நம்பிக்கை சார்ந்த தடைகளைத் தகர்த்தெறிந்து, உண்மை கடவுளாகிய உம்மை நாடித் தேடி வந்து, உம்மில் விசுவாசம் கொள்ள உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. குணம் அளிப்பவராம் இறைவா,
   நோய்கள், மன வேதனைகள், கடன் தொல்லைகள், வேலையின்மை, குழந்தை யின்மை, உணவின்மை, தனிமை, முதுமை போன்ற பல்வேறு துன்பங்களில் உமது உதவியை நாடும் எங்கள் சகோதர, சகோதரிகளை முழுமையாக குணப்படுத்த வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மாட்சியின் மன்னராம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, நாங்கள் உமது மாட்சியை நாடுபவர்களாக வாழவும், மற்றவர்கள் முன் னிலையில் உம்மைப் புகழ்ந்தேற்றவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.