Thursday, April 18, 2013

ஏப்ரல் 21, 2013

பாஸ்கா காலம் 4-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   நல்லாயராம் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு திருப் பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். நல்லாயன் ஞாயிறில் சிறப்பிக்கப் படும் இன்றைய திருவழிபாடு, இயேசுவைப் பின்தொடர்ந்து, நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்ளும் ஆடுகளாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் குரலுக்கு செவி கொடுக்கும் ஆடுகளாக வாழும்போது நாம் அழிவுக்குள்ளாக மாட்டோம். நமக்காக உயி ரைக் கொடுத்த ஆண்டவர் இயேசுவிடம் இருந்து நம்மை எதுவும் பிரித்து விடாத வகை யில், அவரது பாதுகாப்பில் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவருக்கு உண்மை யுள்ள ஆடுகளாக வாழ்ந்து, நாம் கடவுளைச் சார்ந்தவர்கள் என்பதை மற்றவர்களுக்கு பறைசாற்ற வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், திருத்தூதர்கள் பவுல், பர்னபா ஆகியோர் அந்தியோக்கு நக ரில் நற்செய்தி அறிவித்தது பற்றி எடுத்துரைக்
கிறது. அவர்களின் போதனையைக் கேட்க ஏறத்தாழ நகரத்தார் அனைவரும் திரண்டதால் பொறாமை கொண்ட யூதர்கள், பவுலுக் கும் பர்னபாவுக்கும் எதிராக மக்களைத் தூண்டிவிடுவதைக் காண்கிறோம். வேற்றினத் தார்க்கு ஒளியாக இருக்குமாறு அழைக்கப்பட்ட அவர்கள், யூதர்களுக்கு எதிராக கால் தூசியை உதறிவிட்டு வேறு இடத்துக்கு நற்செய்தி பணியாற்ற செல்கிறார்கள். எத்தனை இன்னல்கள் வந்தாலும் கிறிஸ்துவுக்கு உண்மையான சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு நாம் கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், விண்ணக அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்த மக்களைப் பற்றிய யோவானின் திருவெளிப்பாட்டு காட்சியை எடுத் துரைக்கிறது. கடவுளின் ஆட்டுக்குட்டியாம் இயேசுவின் முன்பாக எல்லா நாட்டையும், குலத்தையும் இனத்தையும், மொழியையும் சார்ந்த மக்கள் நிற்பதைக் காண்கிறோம். நல்லாயராம் இயேசு, நம்மை வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்வார் என்ற வாக்குறுதி இங்கு அளிக்கப்படுகிறது. ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் தூய்மையாக் கப்பட்ட மக்களாக வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு நாம் கவனமுடன் செவி கொடுப்போம்.


இறைமக்கள் மன்றாட்டு:
1. எங்கள் நல்லாயராம் இறைவா,
  
உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமக்கு உகந்த மந்தையாக இறைமக்களை உருவாக்க துணைபுரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் ஒளியாம் இறைவா,
   உம்மைப் பற்றிய உண்மையைப் புறக்கணித்து, தவறான கொள்கைகளையும் சமயங் களையும் பின்பற்றி வாழும் மக்கள், உண்மை கடவுளாகிய உம்மை ஏற்றுக்கொள்ளவும் உமது அரசில் ஒன்றிணையவும் அருள்புரிய
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் தலைவராம் இறைவா,
   எங்கள் நாட்டை வழிநடத்தும் அரசியல், சமூகத் தலைவர்
கள் அனைவரும் நீதியோடும், நேர்மையோடும் மக்களை உண்மையின் பாதையில் வழிநடத்தவும், உமது திருச்சபை இம்மண்ணில் வளர துணை நிற்கவும் உதவ வேண்டுமென்று  உம்மை மன்றாடுகிறோம்.
4. எங்கள் வழியாம் இறைவா,
  தங்கள் சுயநலத்துக்காக பணம், பதவி, போதை, வன்முறை ஆகியவற்றின் மீது ஆர்வம் கொண்
டு, பிறருடைய நிம்மதியை சீர்குலைக்கும் தீயவர்கள் அனைவரும் மனம் திருந்தி உமது தூய வழியைப் பின்பற்ற வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் வாழ்வாம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது மந்தை யின் நல்ல ஆடுகளாகவும், உமக்கு சான்று பகரும் நல்ல கிறிஸ்தவர்களாகவும் வாழத் தேவையான நலன்களை எம்மில் பொழிய
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.