Thursday, April 4, 2013

ஏப்ரல் 7, 2013

பாஸ்கா காலம் 2-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
அன்புக்குரியவர்களே,
   பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருவழிபாட்டுக்கு நம் ஆண்டவர் பெயரால் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். நாம் இன்று இறை இரக்கத்தின் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இறைமகன் இயேசு இந்த நாளில்தான் திருத்தூதர்கள் வழி யாக, திருச்சபைக்கு பாவமன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை வழங்கினார். இறைவனின் இருப்பை கேள்வி கேட்கும் அளவுக்கு சந்தேகம் கொண்டிருந்தாலும், அவர் நம் மீது இரக்கம் கொண்டு அவரது உடனிருப்பை உணர்த்துகிறார் என்பதை புரிந்துகொள்ள இன் றைய நற்செய்தி அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பை காணாமலே நம்பவும், அவருக்கு சான்று பகரவும் அழைக்கப்பட்டுள்ள நாம் விசுவாசத்தில் வளர வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய முதல் வாசகம், கிறிஸ்துவின் திருத்தூதர்கள் வழியாக நிகழ்ந்த அருஞ் செயல்களைப் பற்றி எடுத்துரைக்கிறது. திருத்தூதர்கள் செய்த அற்புதங்களால் ஏராளமான ஆண்களும் பெண்களும் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு, இயேசுவின் சீடர்களானதை நாம் காண்கிறோம். திருத்தூதர்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையால், பேதுருவின் நிழல் பட்டவர்கள் கூட நலமடைந்த நிகழ்வு, நாம் கடவுள் மீதும் அவரது பணியாளர்கள் மீதும் எந்த அளவுக்கு நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்க அழைக்கிறது. நாமும் ஆண்டவரில் முழு நம்பிக்கை கொண்டவர்களாய் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், மானிட மகனின் மாட்சியைப் பற்றிய யோவானின் சான்றை எடுத்துரைக்கிறது. கிறிஸ்துவின் ஆட்சியுரிமையில் பங்குபெறும் பொருட்டு அவரது வேதனைகளில் பங்கு பெற்றவராக யோவான் தன்னை சுட்டிக்காட்டுகிறார். நாமும் கிறிஸ்துவோடு இணைந்து வாழ அழைப்பு விடுக்கிறார். எப்பொழுதும் வாழ்பவ ரும், சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் அதிகாரம் கொண்டிருப்பவருமான ஆண்டவரில் நம்பிக்கை கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். என்றென்றும் வாழும் கிறிஸ்து இயேசு வுக்கு சான்று பகரும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நம்பிக்கையின் நாயகராம் இறைவா,
   உம் திருமகன் இயேசுவின் உயிர்ப்பு மறைபொருளின் மீது கட்டி எழுப்பப்பட்டுள்ள திருச் சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலை யினர் அனைவரும் தங்கள் நம்பிக்கையில் நிலைத்திருந்து, உலகின் முன்னிலையில் உமது சாட்சிகளாக திகழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பின் அரசராம் இறைவா,
  
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், உலகப் போக்கில் இறுதி விலகி நிறை உண்மை யாக விளங்கும் உம்மை நாடித் தேடவும், உம் திருமகனின் உயிர்ப்பில் முழுமையான நம்பிக்கை கொண்டவர்களாக, இறையன்பிலும் பிறரன்பிலும் வளர துணைபுரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்மையின் நிறைவாம் இறைவா,
  உண்மையின் ஒளியை ஏற்க மனமின்றி, இருளில் வாழும் எம் நாட்டு மக்கள் அனைவ ரும், உம் திருமகனின் உயிர்ப்பில் உள்ள உண்மையை அறிந்துணர்ந்து, அதன் வழியாக நீர் மக்களுக்கு ஏற்பாடு செய்துள்ள மீட்பை பெற்றுக்கொள்ளவும் தேவையான அகத்தூண் டுதலை அளிக்க
வேண்டுமென்று  உம்மை மன்றாடுகிறோம்.
4. புதுவாழ்வின் ஊற்றாம் இறைவா,
  இலங்கையில் வாழும் எம் தமிழ் சொந்தங்கள் அனுபவிக்கும் வேதனைகளை பரிவுடன் கண்ணோக்கி, அவர்கள் துன்பங்கள் நீங்கவும், உரிமை வாழ்வு பெறவும், உமது மீட்ப ளிக்கும் அருளைக் கண்டுணரவும் உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. நன்மைகளின் உறைவிடமாம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது அருஞ்செயல் களால் நிறைவு பெறவும், காணாமல் விசுவசித்து உமக்கு சான்று பகர்வதன் பலனாக மகிழ்ச்சி நிறைந்த விண்ணக வாழ்வைப் பெற்றுக்கொள்ளவும்
அருள்பொழிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.