Wednesday, August 6, 2014

ஆகஸ்ட் 10, 2014

பொதுக்காலம் 19-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அமைதிக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன் போடு வரவேற்கிறோம். நம்மை அலைக்கழித்து அச்சத்தில் ஆழ்த்தும் இவ்வுலகின் நெருக் கடிகளில், ஆண்டவரைப் பற்றிக்கொண்டு அமைதி காண இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவரிடம் இருந்து நாம் விலகியிருக்கும்போது, அவரை பேய் எனக் கருதி பயந்து நடுங்க வாய்ப்புள்ளது. பேதுருவைப் போன்று துணிவோடு இயேசுவை நோக்கி முன்னேறும்போது, வியத்தகு செயல்களை செய்ய ஆற்றல் பெறுவோம் என்ற நம்பிக்கை தரப்படுகிறது. நம்பிக்கை பயணத்தில் நாம் தடுமாறும் நேரத்தில் நம் ஆண்ட வரை உதவிக்கு அழைத்து, அவரது கரங்களை உறுதியாய் பற்றிக்கொள்ள வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அமைதிக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் எசாயாவுக்கு ஆண்டவர் காட்சி அளித்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. ஈசபேலின் கொலை மிரட்டலுக்கு பயந்து தப்பி ஓடிய எசாயா, ஆண்டவரின் மலையாகிய ஓரேபில் தஞ்சம் அடைகிறார். அங்கு மெல்லிய காற்றில் எசாயாவோடு பேசிய ஆண்டவர், அவரது பயத்தை நீக்கி அமைதி அளிக்கிறார். நம் நெருக் கடி வேளையில், ஆண்டவர் மேல் முழுமையா நம்பிக்கை வைத்து, அவரது உதவியால் அமைதி காண வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அமைதிக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், இஸ்ரயேல் மக்கள் வழியாக ஆண்டவர் அளித்த மீட்பைப் பற்றி எடுத்துரைக்கிறார். இறைவனின் உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் ஒப்படைக்கப்பட்ட இஸ்ரயேல் மக்களிடம் இருந்தே கிறிஸ்து இயேசு தோன்றினார் என்பதை நினிவூட்டுகிறார். மக்களின் மீட்புக்காக துன்புறவும் தயாராய் இருப்பதாக கூறும் திருத்தூதர் பவுலுடன் சேர்ந்து, நற்செய்திக்கு சான்று பகரவும் உல கிற்கு அமைதியைக் கொணரவும் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. அமைதியின் உருவே இறைவா,
  
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது அமைதியின் கருவிகளாக செயல்பட்டு, பல்வேறு நிலைகளில் பிரிந்து வாழும் மக்களிடையே ஒற்று மையை உருவாக்க உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. அமைதியின் அரசரே இறைவா,
  
உலக நாடுகளிடையே இடம்பெற்று வரும் கருத்து மோதல்களும், ஆயுதப் போர்களும் முடிவுக்கு வரவும், அரசுத் தலைவர்கள் அனைவரும் மக்களின் நல்வாழ்வில் ஆர்வம் காட்டவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. அமைதியின் ஊற்றே இறைவா,
   எம் நாட்டில் உமது மக்களுக்கு எதிராக கிளர்ந்தெழுவோரும், நற்செய்தியின் பரவலை தடுக்க நினைப்போரும், வன்முறைகளில் உள்ளம் மகிழ்வோரும் மனந்திரும்ப உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. அமைதியின் நிறைவே இறைவா,
   வறுமை, பசி, தனிமை
, நோய், முதுமை போன்ற பல்வேறு துன்பங்களால் வாடும் மக் களை இரக்கத்துடன் கண்ணோக்கி, அவர்களது வேதனை நீங்கி அமைதி காண உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. அமைதி அருள்பவரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், நெருக்கடி நேரத்தில் உம்மை முழுமையாக பற்றிக்கொள்ளவும், உமது உதவியை சுவைத்து அமைதியுடன் வாழவும் உதவு
மாறு உம்மை மன்றாடுகிறோம்.