Wednesday, August 27, 2014

ஆகஸ்ட் 31, 2014

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
கிறிஸ்துவுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்திரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன் போடு வரவேற்கிறோம். சிலுவையைத் தூக்கிக்கொண்டு இயேசுவைப் பின்தொடர்வதே கிறிஸ்தவ வாழ்வு என்பதை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு தம் பாடுகளையும் மரணத்தையும் முன்னறிவித்ததைக் கேட்ட பேதுரு, இறை மகன் துன்புறக்கூடாது எனத் தடுக்க நினைக்கிறார். தந்தையாம் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்ற வந்த இயேசுவோ, "நீ கடவுளுக்கு ஏற்றவைபற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" எனக் கடிந்து கொள்வதைக் காண்கிறோம். சிலுவை மரணத்தின் வழியாக உயிர்ப்பின் ஆண்டவரான இயேசுவைப் பின்பற்றி, துன்பங்களின் வழியே மாட்சியைப் பெற்றுக்கொள்ள வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
கிறிஸ்துவுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எரேமியா ஆண்டவருக்காக தாம் அனுப வித்த வேதனைகளை எடுத்துரைக்கிறார். ஆண்டவரின் வார்த்தையை மக்களுக்கு அறி வித்ததால், பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளானதாக எரேமியா புலம்புவதைக் காண் கிறோம். ஆண்டவரின் வார்த்தை தம்மில் பற்றியெரியும் தீயைப் போன்று இருப்பதாகவும், அதனை பிறருக்கு அறிவிக்காமல் இருக்க முடியவில்லை என்றும் கூறுகிறார். துன்பங் களுக்கு நடுவிலும் ஆண்டவருக்கு உண்மையுடன் நடக்க வரம் வேண்டி, இவ்வாசகத் துக்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கிறிஸ்துவுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கடவுளுக்கு உகந்த, தூய, உயி ருள்ள பலியாக நம்மைப் படைக்க வேண்டுமென அறிவுறுத்துகிறார். எத்தகைய துன்பங் கள் நேர்ந்தாலும், கடவுளுக்கு உகந்த வகையில் நமது வாழ்வை மாற்றியமைக்க நாம் அழைக்கப்படுகிறோம். கடவுளின் விருப்பத்தை அறிந்து, நமது சிந்தனையைப் புதுப்பிக்க பவுல் அழைப்பு விடுக்கிறார். நன்மையானதையும் கடவுளுக்கு உகந்ததையும் தேர்ந்து, நம் வாழ்வில் செயல்படுத்த வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. அன்பின் அரசரே இறைவா,
  
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இயேசுவைப் பின் பற்றி உம் திருவுளத்தை செயல்படுத்துபவர்களாக வாழவும், இறைமக்களை உமக்கு உகந் தவர்களாக வழிநடத்தவும் உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதியின் அரசரே இறைவா,
   உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும், தனிநபர் சுதந்திரத்தை மதிக்கவும், மனித மாண்புக்கு எதிரான சட்டங்களை நீக்கவும், உமது திருவுளத்தின்படி மக்களை வழிநடத்த வும் 
உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்மையின் அரசரே இறைவா,
   எம் நாட்டில் உமது நற்செய்தியின் பரவலுக்கு தடையாக இருக்கும் அனைவரையும் மனந்திருப்பி, இந்தியா முழுவதும் உமது உண்மையின் அரசை விரைந்து கட்டியெழுப்ப வும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. ஆறுதலின் அரசரே இறைவா,
   உம் திருமகனின் சிலுவைப் பாடுகளில் பங்குபெறும் வகையில்
உலகெங்கும் துன்புறும் கிறிஸ்தவர்கள், உமது மாட்சியால் பாதுகாப்பு பெறவும், பிறரின் மனமாற்றத்துக்கு தூண்டு தலாகத் திகழவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. மகிமையின் அரசரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது விருப்பத்துக் கேற்ப, உம் திருமகனின் சிலுவை வழியைப் பின்பற்றி விண்ணக மாட்சியைப் பெற்றுக் கொள்ள
உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.