Wednesday, May 16, 2012

மே 20, 2012

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
இறைவனில் இனியவர்களே,
   ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரை யும் வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகிறோம். மரணத்தை வெற்றி கொண்டு உயிர்த்தெ ழுந்த இறைமகன் இயேசு, நாற்பது நாட்கள் தனது சீடர்களை சந்தித்து உறுதிபடுத்திய பின்பு விண்ணேற்றம் அடைந்து தந்தையாம் இறைவனின்  வலது பக்கத்தில் அமர்கிறார். உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கவும், அரும் அடையாளங்களைச் செய்யவும் நம் ஆண்டவர் நமக்கு அதிகாரம் தந்துவிட்டு சென்றிருக்கிறார். அவர் தந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, இயேசுவின் உண்மையுள்ள சாட்சிகளாக வாழ, இத்திருப்பலியில் நாம் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
இனியவர்களே, 
     திருத்தூதர் பணிகள் நூலில் இருந்து வாசிக்கப்படும் இன்றைய முதல் வாசகம், இயேசு வின் விண்ணேற்ற நிகழ்வை எடுத்துரைக்கிறது. தூய ஆவி வரும்வரை சீடர்கள் எருசலே மிலேயே தங்கியிருக்குமாறு இயேசு பணிப்பதையும், இயேசு இரண்டாம் முறையாக மீண் டும் வருவார் என்பதை வானதூதர் முன்னுரைப்பதையும் இங்கு காண்கிறோம். இயேசு வின் இரண்டாம் வருகைக்கு எப்பொழுதும் தயார் நிலையில் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்தை கவனமுடன் செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இனியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், நாம் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுமாறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. உயரே ஏறிச் சென்ற கிறிஸ்துவின் விருப்பத்துக்கு ஏற்பவே, நம் ஒவ்வொருவருக்கும் அருள் வழங்கப்பட்டுள்ளது என்று புனித பவுல் எடுத்துரைக் கிறார். திருச்சபையின் தலையாகிய கிறிஸ்துவோடு இணைந்து, அவரது பணியை செய் யும் மறையுடலின் உறுப்புகளாக வாழும் வரம் வேண்டி இவ்வாசகத்தை கவனமுடன் செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. எல்லாம் வல்லவராம் இறைவா,
   உமது திருமகனின் உயிப்பு, விண்ணேற்றம் ஆகிய மறைபொருட்களின் அடிப்படை யில் தோன்றி வளர்ந்த திருச்சபையின் நம்பிக்கை வாழ்வு சிறக்க பணியாற்றுமாறு
, திருத் தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. விண்ணில் வாழ்பவராம் இறைவா,
   இவ்வுலகின் சுகங்களை நாடி உம்மைப் புறக்கணித்து வாழும் மக்கள் அனைவரும், விண்ணக வாழ்வைப் பற்றி சிந்திக்கவும், நீர் காண்பித்த அன்பு வழியில் நடந்து விண்ணக வாழ்வை உரிமையாக்கிக்கொள்ளவும் உதவ  வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
3. தலைசிறந்த அரசராம் இறைவா,
   எம் நாட்டு மக்களும், தலைவர்களும் இயேசுவின் இறைத்தன்மையை ஏற்றுக்கொள்ள வும், அவர் அறிவித்த விண்ணரசில் பங்கேற்க ஆர்வம் கொள்ளவும், எங்கள் நாட்டை உமது ஆட்சிக்கு உரியதா
க்கவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. புதுமைகளின் நாயகராம் இறைவா,
   பேய்களை ஒட்டவும் நோய்களை நீக்கவும் இறைமகன் இயேசு அளித்த அதிகாரம் எம்மில் செயல்படவும், எங்கள் நம்பிக்கையால்
உலகெங்கும் நற்செய்தியைப் பறை சாற்றி, உமது அரசை நிறுவவும் ஆற்றல் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் தலைவராம் இறைவா,
   எங்கள் பங்கு சமூகத்தில் இணைந்திருக்கும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், திருச்சபையின் தலையாகிய கிறிஸ்துவோடு ஒன்றித்து செயல்படும் உறுப்புகளாக வாழத் தேவையான அருளாதார நலன்களை கட்டளையிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.