Thursday, January 30, 2014

பிப்ரவரி 2, 2014

ஆண்டவரை காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழா

திருப்பலி முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   இன்று நாம் இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடுகிறோம். ஆண்டவரின் திருச்சட்டத்தை நிறைவேற்ற நாம் எந்த அளவுக்கு ஆர்வம் கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு இறைமகனாக இருந்தும் மோசேயின் சட்டப்படி தம்மை இறைத்தந் தைக்கு அர்ப்பணித்ததைக் காண்கிறோம். ஆண்டவரின் தாயாக இருந்தும் திருச்சட்டத்தை ஆர்வத்தோடு நிறைவேற்றிய மரியாவின் முன்மாதிரியைப் பின்பற்ற நாம் அழைக்கப்படு கிறோம். குழந்தை இயேசுவை கையில் ஏந்திய இறைவாக்கினர் சிமியோனும், கோவிலில் திருப்பணி செய்துவந்த இறைவாக்கினர் அன்னாவும் மீட்பருக்கு சான்று பகர்கின்றனர். இவர்களைப் போல ஆண்டவருக்கு உகந்த வாழ்வு வாழ்ந்து இயேசுவுக்கு சாட்சிகளாய் திகழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம், "நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்" என்று இயேசுவின் வருகையைப் பற்றி எடுத்துரைக்கிறது. "அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போலும் இருப்பார்" என்று முன்னுரைக்கப் படுவதைக் காண்கிறோம். "இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச் சிக்கும் காரணமாக இருக்கும்" என்ற சிமியோனின் இறைவாக்குக்கு இது முன்னடையாள மாக விளங்குகிறது. பொன், வெள்ளியைப்போல் தூய்மையாக்கிப் புடமிட ஆண்டவரிடம் நம்மை அர்ப்பணிக்கும் வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், இறைமகன் இயேசு மனித குழந்தையாக தோன்றியதன் நோக்கத்தை எடுத்துரைக்கிறது. ஊனும் இரத்தமும் கொண்ட மனிதர்களின் இயல்பில் கடவுளும் பங்கு கொண்டார், மீட்பர் இயேசுவின் மரணத்தின் மூலம் சாவு அழிந்துவிட்டது என்ற உண்மை இங்கு தெளிபடுத்தப்படுகிறது. மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகு மாறு இயேசு எல்லாவற்றிலும் நம்மைப்போல் ஆனார் என்பதை உணர நாம் அழைக்கப் படுகிறோம். நம்மைப் போல் சோதனைக்கு உள்ளான இயேசுவின் உதவியை நம் துன்ப நேரங்களில் நாட வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. எங்கள் ஒளியான இறைவா, 
   திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவ ரும் உமது ஒளியைப் பிரதிபலித்து, உலக மக்கள் அனைவரையும் மீட்பின் பாதையில் வழிநடத்த உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் மீட்பா இறைவா,
  கிறிஸ்து இயேசு வழியாக நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
உலக மக்கள் அனை வரும் கண்டடையத் துணைபுரியும் சாட்சிகளாகத் திகழ கிறிஸ்தவர்களுக்கு உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் வழியா இறைவா,
  
எம் நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஆன்மீக இருளும், தீமையும் முழுமையாக அழிந்து, உமது மீட்பின் ஒளியை நோக்கிய பாதையில் மக்கள் அனைவரும் வழிநடக்க உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. எங்கள் நிறைவா இறைவா,
   இவ்வுலக வாழ்வின் துன்பங்களாலும், சோதனைகளாலும் உம்மை விட்டு விலகிச் செல்லும் மக்கள் அனைவரும், உமது வழிகாட்டுதலால் மீட்பைக் கண்டடைய உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் இலக்கான இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உமது திருவுளத்தை அறிந்து வாழவும், இயேசுவின் வழியாக நீர் அருளும் மீட்புக்கு சான்று பகரவும் உதவு மாறு உம்மை மன்றாடுகிறோம்.