Thursday, May 15, 2014

மே 18, 2014

உயிர்ப்பு காலம் 5-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
"வழியும் உண்மையும் வாழ்வும் நானே!"
உண்மைக்குரியவர்களே,
   ஆண்டவர் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். இயேசுவே நம் வழியும் உண்மையும் வாழ்வு மாக இருக்கிறார் என்பதை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு தந்தையினுள்ளும் தந்தை இயேசுவினுள்ளும் ஒன்றித்திருப்பதை நம்புமாறு நாம் அழைக்கப்படுகிறோம். மனிதராய் வந்த இறைமகனில் செயல்பட்ட இறைத்தந்தையைக் கண்டுகொள்ள இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். மனிதராய் பிறந்து நம்மிடையே வாழ்ந்த இயேசுவில் வெளிப்பட்ட கடவுளின் அன்புக்கு நம்மை முழுவதும் அர்ப்பணிப் போம். கிறிஸ்து இயேசுவின் வழியாய் உண்மை கடவுளைக் கண்டு நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
உண்மைக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், இறைவனின் திட்டத்துக்கு எதிரானவற்றை நாம் செய்யக் கூடாது என்ற பாடத்தை நமக்கு கற்பிக்
கிறது. தொடக்கத் திருச்சபையில் கிரேக்க மொழி பேசுவோருக்கும், எபிரேய மொழி பேசுவோருக்கும் இடையே உணவு பகிர்தலில் ஏற்பட்ட பிரச்சனையைப் பற்றி இங்கு வாசிக்கிறோம். இதைத் தீர்ப்பதற்காக திருத்தொண்டர்கள் ஏழு பேரை திருத்தூதர்கள் நியமிப்பதைக் காண்கிறோம். திருத்தூதர்களின் போதனையால் திருச்சபை விரைந்து வளர்ந்தது. நாமும் கடவுளின் திட்டத்தை நம்மில் நிறைவேற்றி இயேசுவுக்கு சாட்சிகளாய் திகழ வரம் வேண்டி இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
உண்மைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு, கிறிஸ்து இயேசுவே திருச்சபை யின் உயிருள்ள மூலைக்கல்லாய் இருக்கிறார் என்பதை எடுத்துரைக்கிறார். நாம் தூய ஆவியின் ஆலயங்களாக கட்டி எழுப்பபட வேண்டுமென திருத்தூதர் நமக்கு அறிவுறுத்து கிறார்.
நமக்காக உதறித் தள்ளப்பட்ட இயேசுவுக்காக நம்மையே பலியாக ஒப்படைத்து, கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ள ஆண்டவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பவர்களாக வாழ வரம் வேண்டி இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. உண்மை வழியே இறைவா,
   திருச்சபையின் மக்களை உமது வழியில் நடத்தி, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள உதவும் வரத்தை எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

2. உண்மை ஒளியே இறைவா,
   இந்த உலகில் உம்மைப் பற்றிய உண்மையை ஏற்காமலும், புரிந்து கொள்ளாமலும் வாழும் அனைவரின் உள்ளங்களிலும் உமது ஒளியை வீசி,
அவர்களுக்கு விசுவாசத்தை ஊட்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்மை வாழ்வே இறைவா,
  எம் நாட்டு மக்களுக்கு பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்களவை உறுப்பினர் கள் அனைவரையும் உமது வழியிலும் உண்மையிலும் வழிநடத்தி, எங்கள் வாழ்வை வள மாக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

4. உண்மை உயிரே இறைவா,
   உலகெங்கும் பரவி வரும் பயங்கரவாதம், மதவாதம், இனவாதம் போன்ற தீமைகள் நீங்குமாறு, மக்களின் உள்ளங்களில் அமைதியையும் அன்பையும் விதைத்து உயிரூட்டு மாறு
உம்மை மன்றாடுகிறோம்.
5. உண்மை நிறைவே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், இயேசுவின் உண்மை வழியில் நடந்து, நீர் அளிக்கும் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.