Thursday, January 3, 2013

ஜனவரி 6, 2013

ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா

திருப்பலி முன்னுரை:
திருக்காட்சிக்குரியவர்களே,
   ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா திருப்பலியை கொண்டாட உங்கள் அனைவரை யும் அன்புடன் அழைக்கிறோம். உலக செல்வங்களை விட மேலான செல்வமாகிய இறைவனில் மகிழ்ச்சி காண இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. யூதர்கள் அறிந்துகொள்ளாத அரசர் இயேசுவின் பிறப்பை, விண்மீனின் அடையாளத்தைக் கொண்டு கிழக்கத்திய ஞானிகள் அறிந்து கொள்கிறார்கள். குழந்தை இயேசுவின் மேன் மையை உணர்ந்தவர்களாய் அவரைக் கண்டு வணங்கச் செல்கிறார்கள். அனைத்துலகின் அரசராம் இறைவனே, மனிதராக பிறந்திருப்பதை அறிந்து அவருக்கு பொன்னும் சாம்பி ராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாக அளிக்கிறார்கள். அந்த ஞானிகளைப் போன்றே, நாமும் அனைத்துக்கும் மேலாக ஆண்டவருக்கு பணிவிடை செய்யும் மன நிலையைப் பெற்று வாழும் வரம் கேட்டு, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
திருக்காட்சிக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம் ஆண்டவரின் பெயரால் எருசலேம் மாட்சி அடைய இருப் பதைப் பற்றிய இறைவாக்கினை எடுத்துரைக்கிறது. இவ்வுலகின் மக்களினங்களை இருள் கவ்வினாலும், ஆண்டவரின் மாட்சிமிகு ஒளியால் எருசலேம் நிரப்பப்படும் என்று எசாயா இறைவாக்கு உரைக்கிறார். பொன்னும் நறுமணப் பொருளும் ஏந்தி வரும் பிற இனத்தவர் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர் என்பது முன்னறிவிக்கப்படுகிறது. உல கின் மக்களினங்கள் அனைத்தும் ஆண்டவரை அறிந்து, அவரைப் புகழ்ந்தேற்றும் நாள் விரைவில் மலர வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
திருக்காட்சிக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், ஆண்டவரின் மறைபொருள் பற்றிய இறைவெளிப்பாட்டைக் குறித்து எடுத்துரைக்கிறார். ஆண்டவரைப் பற்றிய மறைபொருள் அனைவருக்கும் வெளிப்படுத்தப்படாமல், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு மட் டுமே வெளிப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் நற்செய்தி வழியாக பிற இஸ்ரயேலர் அல்லாத இனத்தவரும் இறைவனின் வாக்குறுதிகளுக்கு பங்காளிகள் ஆகியிருக்கிறார்கள் என் பதை அவர் தெளிவுபடுத்துகிறார். கிறிஸ்துவின் நற்செய்தியை உலக மக்கள் அனைவ ரும் விரைவில் அறிந்துகொள்ள வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. உலகின் நற்செய்தியாம் இறைவா, 
   உம்மைப் பற்றிய நற்செய்தியை உலகெங்கும் பறைசாற்ற உழைத்து வரும், எம் திருத் தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இயேசுவின் இறைத்தன்மைக்கு சான்றுபகர்பவர்களாக திகழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மாட்சிமிகு மன்னராம் இறைவா,
   உலக நாடுகள் அனைத்திலும் உமது நல்லாட்சி மலரவும், மக்கள் அனைவரும் உமது திருச்சபையின் வழியாக உம்மை நாடித் தேடவும் தேவையான
உதவிகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. உன்னத ஒளியாம் இறைவா,
 
எம் நாட்டு மக்கள் அனைவரும் உண்மை ஒளியாகிய உம்மை அறிந்துகொள்ளவும், உமது ஒளியை நோக்கி தங்கள் சிந்தனைகளை செலுத்தவும் தேவையான ஆர்வத்தை உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மகிழ்ச்சியின் நிறைவாம் இறைவா,
   நிலையற்ற இந்த உலகின் செல்வங்களைத் தேடி மன நிம்மதியை இழந்து நிற்கும் மக்கள் அனைவரும், நிலையான செல்வமாகிய உம்மில் நிம்மதி காண அருள்புரிய
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மேன்மை மிகுந்தவராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் உம் திருமகனை வணங்கச் சென்ற ஞானிகளைப் போன்று, நீர் வெளிப்படுத்தும் மறைபொருளை உணர்ந்து வாழும் வரத்தை பொழிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.