Wednesday, July 4, 2012

ஜூலை 8, 2012

பொதுக்காலம் 14-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினான்காம் ஞாயிறு திருப்பலியை கொண்டாட உங்களை அன்பு டன் அழைக்கிறோம். இறைவனின் பணியாளர்களிடம் நம்பிக்கை கொண்டு புதுமை களைக் காண இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவை ஏற் றுக்கொள்ள மனமில்லாத மக்களிடையே அவரால் புதுமைகள் செய்ய முடியவில்லை. கடவுளின் திருப்பணியை செய்யும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் ஆகியோரின் முக்கியத்துவத்தை உணர நாம் அழைக்கப்படுகிறோம். இறைவனிடமும் பிறரிடமும் சரியான நம்பிக்கை கொண்டு வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே,
     இன்றைய முதல் வாசகம், எசேக்கியேல் இறைவாக்கினரை ஆண்டவர் இஸ்ரயேல் மக்களிடம் அனுப்பிய நிகழ்வை எடுத்துரைக்கிறது. இஸ்ரயேலர் பலர் கடவுளின் பெய ரால் வந்த இறைவாக்கினர்களை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாதவர்களாக இருந்ததை இதில் காண்கிறோம். நாம் இறைவனின் பணியாளர்களை ஏற்றுக்கொள்ளும் மனதுள்ள வர்களாக வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், தனது வலுவின்மையில் கட வுளின் வல்லமையைக் காண்பதாக எடுத்துரைக்கிறார். ஆண்டவரின் வெளிப்பாடுகளால் இறுமாப்பு அடையாமல் இருக்குமாறு தனக்கு இந்த துன்பம் வழங்கப்பட்டிருப்பதாக அவர் ஏற்றுக்கொள்கிறார். புனித பவுலைப் போன்று நமது வாழ்வில் வரும் துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நம்பிக்கை தருபவராம் இறைவா,
  
திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனை வரும் உமக்கு நம்பிக்கைக்குரியவர்களாக விளங்கவும், திருச்சபையின் மக்கள் எல்லா ரும் அவர்களிடம் நம்பிக்கை கொண்டு வாழவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. தேர்வு செய்பவராம் இறைவா,
  
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் நடுவிலிருந்து, திருச்சபையை வளப்படுத்த தேவையான அருட்பணியாளர்களையும், நல்ல அரசியல், சமூகத் தலைவர்களையும் தேர்ந்தெடுத்து உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நற்பேறு வழங்குபவராம் இறைவா,
  எங்கள் நாட்டு மக்களும், தலைவர்களும் உம்மிலும் பிறரிலும் நம்பிக்கை கொண்டு வாழவும், ஒருவரை ஒருவர் மதித்து நடந்து அன்பிலும் அமைதியிலும் வளர்ச்சி காண வும் உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. ஆறுதல் அளிப்பவராம் இறைவா,
   பல்வேறு நோய்களாலும், துன்பங்களாலும் வேதனை அடைந்து வருந்தும் மக்கள் அனைவரும், நம்பிக்கையோடு உமது உதவியை நாடவும், உமது இரக்கத்தால் தங்கள் வாழ்வில் ஆறுதலை சுவைக்கவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. புதுமைகள் புரிபவராம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம்மிலும் பிறரி லும் முழுமையான நம்பிக்கை கொண்டு வாழவும், உமது அருளால் வாழ்க்கைத் தேவை களில் நிறைவு காணவும்
புதுமைகள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.